விஎல்சி மீடியா பிளேயரை பயன் படுத்தும் பயனாளர்களை மனதை கலங்கடித்த ஹேக்கர்கள்

விஎல்சி மீடியா பிளேயரை பயன் படுத்தும் பயனாளர்களை மனதை கலங்கடித்த ஹேக்கர்கள்.


பெரும்பாலான மக்கள் விஎல்சி பிளேயரை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.இதில் ஆடியோ மற்றும் வீடியோவை இயக்க உதவுகிறது.டிவி,லேப்டாப் போன்றே பல சாதனங்களில் இந்த விஎல்சி பிளேயர் அதிகம் பயன்படுத்திகிறார்கள். குறிப்பாக லேப்டாப் பயனாளிகள் அதிகம் பயன்படுத்துவார்கள்.

 
அதாவது நமது லேப்டாப்பில் குறைத்த இடங்களை(memory)
எடுத்துக்கொண்டு அதிவேகமாக செயல்படும் (மற்றும்) அனைத்து வகையான பார்மேட்டுகளை பிளே செய்யும் சிறப்பு அம்சங்களை கொண்டு உள்ளது. 
இந்நிலையில் அனைவருக்கும் விருப்பமான இந்த வில்சி மீடியா பிளேயர்,சீனா உதவியுடன் விஎல்சி பயனாளர்களை கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.குறிப்பாக விஎல்சி மீடியா பிளேயர் சீனா அரசு உதவியுடன் விஎல்சி பயனாளிகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக சிமாண்டேக் சைபர் செக்யூரிட்டி அமைப்பில் உள்ள ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வெளிவந்த தகவலின் பேரில்,APT10 என்ற நிறுவனம் விஎல்சி மீடியா பிளேயரை
பயன்படுத்தி மால்வேர் மூலம் அரசாங்கம்,காவல்துறை,மருத்துவம்,மதம் மற்றும் பிற நிறுவனங்களை மிக தீவரமாக கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா,அமெரிக்கா,கனடா,ஹாங்காங்,துருக்கி,இத்தாலி,ஜப்பான் போன்ற பல நாடுகளில் இந்த  சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த சைபர் தாக்குதல் கடந்த 2021-ஆம்  ஆண்டு தொடங்கி 2022-ஆம் பிப்ரவரி மாதம் வரை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது.எனவே,இந்த சாப்ட்வேரை கணினியில் அல்லது ஸ்மார்ட்போன்களில் டவுன்லோட் செய்திருந்தால் அதை உடனடியாக டெலிட் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog